காய்கறி வியாபாரியை மிரட்டி பணம் பறிப்பு

72பார்த்தது
டெல்லியில் உள்ள பஹஜன்புரா பகுதியில் வியாபாரி ஒருவர் வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள், வியாபாரியை கடுமையாக தாக்கிவிட்டு அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி