திருவாச்சி ஊராட்சியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

52பார்த்தது
திருவாச்சி ஊராட்சியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.
திருவாச்சி ஊராட்சியில் திருவாச்சி அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவாச்சி ஊராட்சியில், தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி தலைவர் சோளி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி முன்னிலை வகித்தார். பேரணியை பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பி டி ஓ க்கள் கார்த்திகேயன் மற்றும் அப்துல்வகாப் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதை விழிப்புணர்வு தட்டிகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதில் பெருந்துறை மெடிக்கல் அலுவலர் பேபி, ஊராட்சி துணைத் தலைவர் பூவேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கராஜ், தனபாக்கியம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி