ஊத்துக்குளி அருகே போலி மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது.

81பார்த்தது
ஊத்துக்குளி அருகே போலி மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது.
ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் போலி மதுபானம் விற்பனை செய்த வாலிபரை ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர்.

இளையான்குடி, தாயமங்கலம் பகுதியை சேர்ந்த பாண்டி மகன் பிரவீன் (25) இவர் ஊத்துக்குளி -திருப்பூர் ரோட்டில்  உள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் போலி மதுபானம் விற்பனை செய்வதாக ஊத்துக்குளி போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து , ஊத்துக்குளி போலீசார் அப்பகுதிக்கு சென்று சட்ட விரோதமாக போலி மதுபானம் விற்பனை செய்த பிரவீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் பிரவீனிடமிருந்து போலி மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி