பெருந்துறை அருகே விபத்தில் ஆண் மயில் பலி.

559பார்த்தது
பெருந்துறை அருகே விபத்தில் ஆண் மயில் பலி.
அடுத்துள்ள சென்னிமலை பகுதியில் பைக் மீது மோதிய விபத்தில் ஆண் மயில் பரிதாபமாக இறந்தது.

பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலையிலிருந்து இரண்டு வாலிபர்கள் பைக்கில் பெருந்துறை ஆர் எஸ் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் முத்தையன் கோயில் பிரிவு பகுதியில் சென்ற போது அந்தப் பகுதியில் ரோட்டை கடந்த மயில் ஒன்று எதிர்பாராத விதமாக இந்த பைக்கில் சிக்கியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட இரண்டு வாலிபர்களும் பலத்த காயத்துடன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அடிபட்ட ஆண்மயில் சம்பவ இடத்திலேயே இறந்து போனது இது தொடர்பாக சென்னிமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மயிலை மீட்டு வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி