குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பதாக கூறிய தொழிலாளி கைது

2273பார்த்தது
டி.என். பாளையம் அருகே குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பதாக பொதுமக்களிடம் மிரட்டல் தொழிலாளி கைது.

டி.என். பாளையம் அருகே வாணிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்கின்ற பாலசுப்பிரமணி(வயது 58), தொழிலாளி. இவர் வாணிப்புதூர் மேடு அருகே உள்ள வாணிப்புதூர் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலைத் தொட்டியின் கேட் வாழ்வினை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை நேரில் பார்த்த சிலர் பாலசுப்பிரமணியை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் பொதுமக்கள் பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார்.

மேலும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் விஷம் கலந்து உங்களை கொன்று விடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வாணிபுதூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ விஜய கணேசன், பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி