பள்ளியின் கலை விழா மிக சிறப்பாக நடைபெற்றது

56பார்த்தது
பள்ளியின் கலை விழா மிக சிறப்பாக நடைபெற்றது
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024" கலைவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. சி. ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு தலைமையுரை வழங்கினார். பள்ளியின் தாளாளர் திரு. எஸ். டி. சந்திரசேகர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இதில் பொருளாளர். திரு. பி. கே. பி. அருண் மற்றும் துணை செயலர். திரு. எஸ். நல்லசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்க, பள்ளியின் ஆலோசகர். திரு. சி. பாலசுப்ரமணியம், திரு. எம். யுவராஜா, , மற்றும் வேளாளர் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர். ஷியாமளா ரமேஷ்பாபு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பள்ளியின் முதன்மை முதல்வர் திரு. ஆர். நல்லப்பன், திருமதி. எஸ். பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும், இவ்விழாவில் பள்ளியின் முதல்வர். திருமதி. வி. பிரியதர்ஷினி ஆண்டறிக்கை வாசித்தார். கலைநிகழ்ச்சியின் இறுதியாகத் துணை முதல்வர். திருமதி. ஆர். மஞ்சுளா நன்றியுரை வழங்கினார். இதில் மக்கள் தொடர்பு அலுவலர் திரு. எம். கார்த்திகேயன், ஆசிரிய ஆசிரியைகள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு "உத்பவ்" கலைவிழா இனிதே நிறைவுற்றது.

தொடர்புடைய செய்தி