CAA சட்டத்திற்கு எதிராக விசிகவினர் ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
மத்திய அரசு புதிதாக அமுல்படுத்தியுள்ள குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஈரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சாதிக் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும்
இந்த சட்டம் சிறுபான்மை மக்களை பாதிப்படையச் செய்யும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக அரசு இந்த சட்டத்தை திடீரென அமல்படுத்தியுள்ளது என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும்,
குடியுரிமைச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி