பிரதமர் மோடிக்கு அனுமதி மறுப்பு

68பார்த்தது
பிரதமர் மோடிக்கு அனுமதி மறுப்பு
கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வரும் 18ம் தேதி பிரதமர் மோடி கோவை வரும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனிடையே, வாகன பேரணிக்கு அனுமதி கோரி பாஜக நீதிமன்றத்தை நாடியுள்ளது. இன்றைய தினம் கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர்.