பஸ் மோதி தலை நசுங்கி பலி - சிசிடிவி வீடியோ

4264பார்த்தது
பல்லடம் அருகே சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த பொங்கலூர் கொடுவாய் பகுதியில் சிவம் பில்டர்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் பொள்ளாச்சி சாலையில் இருந்து கொடுவாய் சந்தை கடை பகுதிக்கு செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக சாலையை கடந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த திருமுருகன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசி பாளையம் போலீசார் சம்பவ இடம் பிரிந்து சென்று திருமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி