ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்

563பார்த்தது
ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
ஈரோடு மாநகரில் மேட்டூர் சாலையில் அபிராமி தியேட்டர் கடந்த 1985ம்ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த தியேட்டர் திருப்பூர் சக்தி சினிமாஸ் உடன் இணைந்து ஸ்ரீசக்தி அபிராமி சினிமாஸ் என்ற புதிய பெயரில், பல்வேறு சிறப்பம் சங்களுடன் புதிய பொலிவுடன் செயல்பட உள்ளது. இந்நிலையில், அபிராமி தியேட்டரின் 39ம் ஆண்டு துவக்க விழாவை யொட்டி தியேட்டரில் கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள்தலைமையில் கணபதியாகம் நடைபெற்றது. அபிராமி தியேட்டர் சேர்மேன் என். எஸ். எஸ். செந்தில் நாதன், நிர்வாக இயக்குநர்கள் புனிதா, அண்ணாமலை, ஸ்ரீ சக்தி அபிராமி சினிமாஸ் நிர்வாக இயக்குநர்கள் கார்த்திக், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த யாகத்தில் தியேட்டர் நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சேர்மேன் செந்தில்நாதன் கூறியதாவது:
அபிராமி தியேட்டர் மக்களின் பேராதரவுடன் கடந்த39 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஸ்ரீ சக்தி அபிராமி சினிமாஸ் என பெயரில், 7 ஸ்கிரின் கொண்ட தியேட்டராக புதிய பொலிவுடன் விரைவில் செயல்பட உள்ளது. தியேட்டரில் மக்களுக்கு பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் ஏற்படுத்தியுள்ளோம். குறிப்பாக சுமார் 300 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு புதிய பார்க்கிங் வசதி, 7 தியேட்டர் களிலும் நவீன ஏசி வசதி, இருக்கை வசதிகள், பால்கனிக்கு கூடுதல் வசதி போன்றவை ஏற்படுத்தியுள் ளோம்.

தொடர்புடைய செய்தி