அந்தியூரில் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்

10967பார்த்தது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்திரகாளியம்மன் கோவில் முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனை இட்டதில், அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 2 லட்சம் ரூபாய் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுக்கா, தெலுங்கனூர் பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் (32) என்பதும், இவர் கோபி பகுதிக்கு தனது உறவினர்களோடு செகணட் கார் எடுக்க வந்ததும் தெரிய வந்தது, இருப்பினும் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி