மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து ஓட்டுனர் உயிரிழப்பு

2261பார்த்தது
மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து ஓட்டுனர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இதன் வழியாக காங்கேயத்திலிருந்து தவிடுபாரம் ஏற்றிக் கொண்டு மைசூருக்கு செல்வதற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தாமரைக்கரை அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலை பாதையில் ஓரமாக கவிழ்ந்தது. இதில் கொள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் ஜெபி(35) உயிரிழந்தார. இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி