வெள்ளித்திருப்பூர்: குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

3966பார்த்தது
வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள பட்லுார் கெம்மியம்பட்டி காலனியை சேர்ந்த அம்மாசை(70), பழனி(75) ஆகியோர் அருகருகில் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிசை வீட்டின் மேல்பகுதி தகர சீட்டால் வேயப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில், அம்மாசை வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மின் கசிவின் காரணமாக, தீப்பிடித்து குடிசை வீடு மளமளவென எரிய தொடங்கியது.

மேலும், அம்மாசையின் அண்டை வீடான பழனியின் குடிசையிலும் தீப்பற்றியது. தகவலறிந்த அந்தியூர் தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில், இரண்டு குடிசை வீடுகள் மற்றும் நிலக்கடலை கொடி ஆகியவை தீக்கிரையாகின. இதுகுறித்து பட்லுார் விஏஓ, முருகேசன், வெள்ளித்திருப்பூர் போலீஸ் எஸ்.ஐ., தங்கவேல் உள்ளிட்ட போலீசார் விசாரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி