மேம்பாலம் அமைக்க ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
மேம்பாலம் அமைக்க ஆர்ப்பாட்டம்
பவானி அருகே உள்ள லட்சுமி நகரில், கோவை, கொச்சின் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. சேலத்திலிருந்து நாள்தோறும் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன.
லட்சுமிநகரிலிருந்து பவானி செல்ல சர்வீஸ் ரோடு பிரிவதால், அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால், குமாரபாளையம் பாலத்திலிருந்து, கோணவாய்க்கால் பிரிவு வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, ஒருங்கிணைப்பாளர் விஜயக்குமார் தலைமையில், லட்சுமிநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் விரைவில் பாலம் அமைக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
முன்னாள் எம்எல்ஏ. , விடியல் சேகர், மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரன், லாரி மற்றும் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி