“தியானம் செய்வதால் ஞானம் வந்துவிடாது” - கார்கே

58பார்த்தது
“தியானம் செய்வதால் ஞானம் வந்துவிடாது” - கார்கே
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதை விமர்சித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்வதாலோ, கடலிலும் கங்கையிலும் முங்கி எழுவதாலோ ஞானம் வந்துவிடாது. மகாத்மா காந்தியைப் பற்றி மோடி படித்திருக்க மாட்டார். ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு பிரதமர் மோடிக்கு ஓய்வு கிடைக்கும்போது, மகாத்மா காந்தியின் சுயசரிதையைப் படிக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி