தீப்பிடித்ததால் அலறி அடித்து ஓடிய ஊழியர்கள் - பகீர் வீடியோ

69712பார்த்தது
குஜராத் மாநிலம் அஞ்சார் அருகே ஸ்டீல் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் ஊழியர்கள் பணி செய்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கம்பெனியில் உள்ள உலை ஒன்று திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் முழுவதும் தீப்பிடித்து ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி