மாடு ரூபத்தில் வந்த எமன்.. நொடிப்பொழுதில் சாவு (சிசிடிவி)

21794பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் அருகே சாலையில் ஜூன் 22ஆம் தேதி இரண்டு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டன. அந்த நேரம் சாலையில் நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையில் சண்டையிட்ட மாடு ஒன்று அவரை முட்டியது. இதில் நிலைத்தடுமாறி அவர் கீழே விழுந்தார். அதே நேரத்தில் எதிர் திசையில் வந்த பேருந்து வேலாயுதராஜ் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த பதறவைக்கும் சிசிடிவி தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி