யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடக்கம்

74பார்த்தது
தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் (மே 23) தொடக்கமாகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இன்று தொடங்கி 25ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையோரப் பகுதிகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை சரணாலயம், ஆனைமலை சரணாலயம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி