பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த நபர் குண்டு வைத்திருக்கலாம் என பேசிய மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஷோபா அவர்களின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.