ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

55பார்த்தது
ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
மேற்குவங்க ஆளுநர் சிவி ஆனந்த் போஸ் மீதான பாலியல் புகார் வழக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாஜிஸ்திரேட் முன் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்திற்குப் பிறகு சனிக்கிழமையன்று(மே 18) மூன்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை இம்மாதம் 2ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே செல்ல விடாமல் தடுத்ததாகவும், போலீசில் புகார் கொடுப்பார் என அஞ்சி அச்சுறுத்தியதாகவும் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.