ஓபிஎஸ் நடவடிக்கையால் தான் அதிமுக பின்னோக்கி சென்றது!

82பார்த்தது
ஓபிஎஸ் நடவடிக்கையால் தான் அதிமுக  பின்னோக்கி சென்றது!
ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக பின்னோக்கி சென்றது என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (மே 19) செய்தியாளர்களை சந்தித்த அவர், 'அதிமுக பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.
தனக்குப் பதவி இல்லை என்பதால் அதிமுகவை பிரிக்க திட்டமிட்டார். கட்சியின் முக்கியத்துவம், நலன் கருதி ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டார். அதிமுகவின் முக்கிய முடிவுகளில் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மௌனம் காப்பார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பி. ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றது அதிமுகவின் வெற்றி ஓபிஎஸ்-ன் வெற்றி அல்ல' என்றார்.

தொடர்புடைய செய்தி