மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் - மக்கள் வீதிகளில் தஞ்சம்

58பார்த்தது
மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் - மக்கள் வீதிகளில் தஞ்சம்
மகாராஷ்டிராவில் புதன்கிழமை (ஜூலை 10) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹிங்கோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பொதுமக்கள் ‌வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி