மோடியின் பிரச்சாரங்களால் கவனம் சிதற வேண்டாம் - ராகுல் காந்தி

64பார்த்தது
மோடியின் பிரச்சாரங்களால் கவனம் சிதற வேண்டாம் - ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடியின் பொய்ப் பிரச்சாரங்களில் கவனம் சிதறாமல் இருக்க இளைஞர்களுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 4ஆம் தேதி இந்தியா அரசு அமைய உள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 30 லட்சம் அரசுப் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புப் பணிகளைத் தொடங்குவோம் என்பது எங்கள் உத்தரவாதம் என‌ உறுதியளித்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். நேற்று(மே 8) அதானி, அம்பானி, ராகுல் குறித்து மோடி விமர்சனம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி