குழந்தை கடத்தல் வதந்தியை நம்ப வேண்டாம்

65பார்த்தது
குழந்தை கடத்தல் வதந்தியை நம்ப வேண்டாம்
குழந்தை கடத்தல் சம்பவங்கள் வடசென்னை பகுதியில் அதிகளவு நடப்பதாக பரவும் காணொளிகள் சமூகவலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இவை குழந்தைகைளின் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் சென்னை பெருநகர காவல்துறை இதுகுறித்தது விளக்கம் அளித்துள்ளது. அதில் இது போன்ற குழந்தை கடத்தல் சம்பவங்கள் வடசென்னை பகுதியில் நடப்பதாக பரவும் காணொளிகள் அனைத்தும் நமது மாநிலத்துக்கு தொடர்பற்றவை . எனவே தவறான தகவல்களை பார்த்து மக்கள் பதட்டமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி