திமுக-காங். இடையே இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்

65பார்த்தது
திமுக-காங். இடையே இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்
திமுக-காங்கிரஸ் இடையே இன்று மாலை தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து முகுல் வாஸ்னிக் மற்றும் அஜய்குமார் உள்ளிட்டோர் இன்று மாலை 4 மணிக்கு சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மற்றும் புதுச்சேரியில் 1 என மொத்தம் 10 சீட் ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விசிக, மதிமுக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டு முடிந்த நிலையில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு எட்டப்படும்.

தொடர்புடைய செய்தி