கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாயமான பெண் மீட்பு

82பார்த்தது
கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாயமான பெண் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கட்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் (43). இவரது மனைவி அமுதா (33). இவா் பாளையம் பேரூராட்சி 10-ஆவது வாா்டில் திமுக சாா்பில் உறுப்பினராக பதவி வகித்து வருகிறாா். இவா்களது மகள், குஜிலியம்பாறையிலுள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதில் போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே கடத்தப்பட்ட சிறுமியை மீட்க வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் துா்காதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கரூரில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியை குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த ஒருவா் பாா்த்து விசாரித்தாா். பிறகு குஜிலியம்பாறை காவல் நிலையத்துக்கு அந்த சிறுமி அழைத்து வரப்பட்டாா்.

இதையடுத்து, பேரூராட்சி உறுப்பினா் அமுதா, இவரது கணவா் குமாா் ஆகியோா் குஜிலியம்பாறை காவல் நிலையத்துக்கு வந்தனா். தங்கள் மகள் எங்கும் செல்லவில்லை. வீட்டில் கோபித்துக் கொண்டு சென்றவா் திரும்ப வந்துவிட்டாா் என எழுதிக் கொடுத்துவிட்டு சிறுமியை காவல் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி