தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பத்திரிக்கையாளர் சந்திப்பு

74பார்த்தது
பழனி இரயிலடி சாலையில் உள்ள தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வில் தென்னிந்தய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வந்த சபரி என்பவர் தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கு முழு மூச்சாக பாடுபட்டு வந்ததால் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் ஜி அவர்களால் கௌரிவிக்கப்பட்டு கட்சியின் பொது செயலாளராக அறிவிப்பு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக சபரி அறிவிக்கப்பட்டமைக்கு கட்சி நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை தமிழகத்தில் வளர்ச்சி பாதை நோக்கி செல்வதற்கு முழுமூச்சாக உழைப்பேன் என்றும் அடிவாரம் பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து காணப்பட்டு வரும் நிலையில் அனைத்து வியாபாரிகளால் கடையடைப்பு நடைபெற உள்ள நிலையில் தென்னிந்திய பார்வேர்டு பிளாக் கட்சி தங்களது முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர் மாணவிகள் பாட உபகரணங்கள் வாங்குவதற்கு பணம் இல்லாமல் தவித்து வரும் சூழ்நிலையில் அவர்களுக்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி