பழனி: பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

54பார்த்தது
பழனியை அருகே ஆயக்குடி கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஐடிஓ அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பெரும்பாலும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த கிராமப்புற மாணவர்கள் பயின்று வருகின்றனர். 1977 ம் ஆண்டு ஐ. டி. ஓ. மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் 47 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களில் பலரும் அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளிலும், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்களாகவும், வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பவர்களாகவும் உள்ளனர். அவர்கள் அனைவரும் தாங்கள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தை அடைய உறுதுணையாக இருந்த பள்ளியையும், தங்களது குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் அழைத்து வந்து எடுத்துக் கூறி மகிழ்ந்தனர். மேலும் புதுச்சேரி பெங்களூர் கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த நண்பர்கள் பள்ளியில் படித்து 47 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் தங்கள் பள்ளிப் பருவ நிகழ்வுகளை எடுத்துக் கூறி அன்பை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி