திண்டுக்கல் மாவட்டம் பழனி திரு ஆவினங்குடி கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பக்தர்கள் அச்சமடைகின்றனர். எனவே தேவஸ்தான நிர்வாகம் மாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.