பொள்ளாச்சியை சேர்ந்த R. S. கிருஷ்ணன் என்பவர் அதிமுக மற்றும் சசிகலாவின் தீவிர விசுவாசி. இவர் அதிமுக அனைத்து தலைவர்களும் இணைந்து ஒருங்கிணைந்த அதிமுக உருவாகி வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டி, உடல் முழுவதும் அலகு குத்தி பறவை காவடியில் பழனியில் கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென தொண்டர் ஒருவர் அலகு குத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.