வீடுகளில் நகை வெள்ளி பொருட்கள் கொள்ளை போலீசார் விசாரணை

60பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு தட்டார் தெருவில் வசித்து வருபவர் தங்கமுத்து இவர் திருமண விசேஷத்திற்காக வெளியூர் சென்றிருந்தார். இவரது வீட்டின் அருகே திண்டுக்கல் ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார் சேக் பரீத் குடியிருந்து வருகிறார். தங்கமுத்து வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டின் உட்புறம் இருந்த பீரோவை உடைத்து ஐந்து பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடி சென்றனர். மேலும் அருகில் உள்ள போலீசார் சேக்பரித் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் நகைகள் வெள்ளி கொலுசுகளை திருடி சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உடனடியாக வத்தலகுண்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீடுகளை ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்து வருகின்றனர். வத்தலகுண்டு பகுதியில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி