தேவையற்ற இணைப்புகளை திறக்காதீர்கள் போலிசார் எச்சரிக்கை

596பார்த்தது
தேவையற்ற இணைப்புகளை திறக்காதீர்கள் போலிசார் எச்சரிக்கை
இன்றைக்கு அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கி மூலமே நடந்து வருகின்றன. ஆன்லைன் மூலம் வெளி நாடுகளில் வேலைக்கு முயற்சிப்பது, விலையுயர்ந்த செல்போன் மற்றும் பொருட்கள் ஆன்லைன் மூலம் வாங்குவதற்காக புக்கிங் செய்வது, பரிசு பொருட்கள் வந்துள்ளதாக வரும் கால்கள், பணம் இரட்டிப்பாக தருவதாக வரும் விளம்பரங்கள் என பல்வேறு வகைகளில் மக்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்பிலேயே உள்ளனர்.

இந்த தொடர்புகளில் உள்ள லிங்க், வாட்ஸ்அப் எண், இ. மெயில் உள்ளிட்டவற்றை குறி வைத்து தொடர்ந்து மோசடிகள் நடந்து வருகின்றன. அலைபேசியில் ஏ. டி. எம். கார்டு எண் கேட்டு பணத்தை பறிக்கும் கும்பலின் அட்டூழியத்தால் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வட மாநிலங்களில் இருந்து வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் செல்போன்களில் வரும் தேவையற்ற இணைப்புகளை திறக்க வேண்டாம். செல்போன், இ-மெயில், எஸ். எம். எஸ். , மூலம் வரும் தகவல்களுக்கு பதில் சொல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி