நத்தம் அருகே விஷம் குடித்து பெண் சாவு

68பார்த்தது
நத்தம் அருகே விஷம் குடித்து பெண் சாவு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மேலமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி பரிதாபேகம் (42). கணவன், மனைவி இருவருக்குமிடையில் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் வெறுப்படைந்த பரிதா பேகம் கடந்த மாதம் 30-ஆம் தேதி விஷத்தை குடித்து விட்டார். உடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திங்கட்கிழமை அங்கு சிகிச்சை பலனின்றி பரிதா பேகம் இறந்து போனார். இது குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி