கோபால்பட்டி மற்றும் வத்திபட்டி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

66பார்த்தது
கோபால்பட்டி மற்றும் வத்திபட்டி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
வே. குரும்பபட்டி உபமின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை - 18. 06. 2024 மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோபால்பட்டி, அஞ்சு குழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வார்பட்டி, மருநூத்து, மஞ்சநாயக்கன்பட்டி, சக்கிலியன்கொடை, எர்ரமநாயக்கன்பட்டி, வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரி செட்டிபட்டி, ஆவிளிப்பட்டி, முளையூர், சின்ன முளையூர், ஒத்தக்கடை, ராமராஜபுரம் ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதைபோல் எல். வலையபட்டி உப மின் நிலையத்தில் நாளை - செவ்யாய்கிழமை (18. 06. 2024) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி மற்றும் பெருமாள்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி