நத்தம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்காக முகூர்த்தக்கால்

65பார்த்தது
நத்தம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்காக முகூர்த்தக்கால்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம்
காமராஜர் நகர் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா 1999-ஆம் ஆண்டில் 15 நாள் திருவிழாவாக நடத்தப்பட்டது. அதன் பின்னர் திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு வருகிற 18-ஆம் தேதி அழகர்மலை தீர்த்தம் அழைத்து
வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் வியாழக்கிழமை
மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்,
தீபாராதனைகளுக்கு பின் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
தொடர்ந்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு
அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்று
வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு
தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகிற 21-ஆம்தேதிபால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், 25-ஆம் தேதி அம்மன்
நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவின்
முக்கிய நிகழ்ச்சியான கிடாய் வெட்டி ரத்தம் குடிக்கும் நிகழ்வு
வருகிற ஜூலை 2-ஆம் தேதி இரவும், மறுநாள் அன்னதானமும்
நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காமராஜர்நகர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி