பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு கூட்டம்

54பார்த்தது
பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள அஞ்சுகுளிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு மாதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை குளோரி தலைமை தாங்கினார். மலேரியா நோயின் அறிகுறிகள், பரவும் முறை, பரிசோதனை, சிகிச்சை மற்றும் கொசுக் கட்டுப்பாடு குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர் சுகாதார ஆய்வாளர்கள் நல்லேந்திரன் மற்றும் முனியப்பன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் மரியோ விக்டர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜோதி முருகன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி