புங்கம்பாடியில் மகா கருப்பண்ணசாமி கோயில் குடமுழுக்கு விழா

80பார்த்தது
புங்கம்பாடியில் மகா கருப்பண்ணசாமி கோயில் குடமுழுக்கு விழா
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்ததுள்ள ராகலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புங்கம்பாடியில் மகா கருப்பண்ணசாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அஷ்டபந்தன குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக பூர்ணாகுதி, வேதபாராயனம், கடம்புறப்பாடு தீபாரதனை உள்பட 2 கால யாக பூஜைகள், நவபாஷனத்தால் செய்யப்பட்ட யந்திர பிரதிஷ்டை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்தில் மேட்டுக்கடை திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றிய போது வானில் கருடன் வட்டமிட குடமுழுக்கு நடைபெற்றது. இதனைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோசமிட்டனர். இதில்சுற்று வட்டார கிராம மக்கள் திரளான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு கலந்து கொண்ட பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி