நத்தம் அருகே நீரில் மூழ்கி சிறுவன் பலி

70பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள வத்திபட்டி சேர்ந்தவர் சுந்தரம் மகன் முத்துப்பாண்டி (வயது 13). இவன் வத்திபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்ள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கல்வி ஆண்டுக்கான கடைசி தேர்வு எழுதிவிட்டு தனது அண்ணன் மகேஸ்வரன் மற்றும் நண்பர்களுடன் வத்திபட்டி அருகேயுள்ள சொக்கன்ஆசாரி குளத்தில்குளித்துக் கொண்டிருந்தான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கினான். இதைப்பார்த்த அவனது அண்ணன் மற்றும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு இறங்கி முத்துப்பாண்டி தேடி மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். இந்த நிலையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது முன்னதாகவே முத்துப்பாண்டி இறந்து விட்டதாக கூறினர். பின் உடல் கூறு ஆய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நத்தம் போலீஸார் நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி