நத்ததில் சிம்ம வாகனத்தில் அம்மன் நகர்வலம்!

1067பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் மகாகாளி அலங்காரத்தில் மின்ரதத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மு ன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி