வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் தீ!

1559பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கோணபட்டி சேர்ந்தவர் சிவசங்கர்(36). வைக்கோல் வியாபாரி. இன்று இவர் தனது சொந்த லாரி ஆவிளிபட்டி வழியாக வியாபாரத்திற்கு வைக்கோல் ஏற்றிச் சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக மின் கம்பியில் உரசியதில் மளமளவன தீ பிடித்தது. தகவலறிந்த நத்தம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த சிவசங்கருக்கு காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி