"முதல்வர் ஸ்டாலினும் கைதுசெய்யப்படுவார்"

569பார்த்தது
"முதல்வர் ஸ்டாலினும் கைதுசெய்யப்படுவார்"
திகார் சிறையில் 6 மாதங்கள் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் சஞ்சய் சிங் 'அநீதி மற்றும் சர்வாதிகாரத்திற்கு' எதிராக போராடுவதற்கான உறுதியை சிறைவாச அனுபவம் தந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார். முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பாஜக சொல்வதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டுமா? அதன் பிறகு இதையே ஒரு போக்காக மாற்றி விடுவார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்வார்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி