மாநகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

81பார்த்தது
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் மாநகர திமுக சார்பில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ ஐ. பி. செந்தில்குமார் திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், திமுக சார்பில் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12. 30 மணியளவில் ரவுண்ட் ரோடு பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

பின்னர், பொதுமக்களுக்கு மோர், ஆரஞ்சு பழச்சாறு, பப்பாளி உள்ளிட்ட பழங்களை வழங்கினார். இதில் அப்பகுதி மக்கள் கடும் கோடை வெயில் நிலவும் இந்த நேரத்தில் பழங்கள் மற்றும் பழச்சாறு வாழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி