10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே. 10) வெளியாகியுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 88. 8% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 85. 45 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91. 94 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் 24ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.