

தர்மபுரி: தொழிற்சங்கங்களின் உரிமை மீட்பு பயணம் விழிப்புணர்வு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் குமரி முதல் கோட்டை வரை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் கட்சிசாரா தொழிற்சங்கங்களின் உரிமை மீட்பு புரட்சி பயணம் இன்று விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணமாகச் சென்று கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கங்கள் நலவாரிய சம்பந்தமான விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு என்று தனித்துறையை உருவாக்க வேண்டும், நலவாரியங்களுக்கு வாரியத் தலைவர், உறுப்பினர்கள், 3 ஆண்டுக்கு ஒருமுறை பதிவுபெற்ற தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாக்குரிமை வழங்கி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும், நலவாரிய பதிவிற்கு வி.ஏ.ஓ பரிந்துரை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், நலவாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000 உயர்த்தி வழங்கிட வேண்டும், நலவாரியத்தில் 5 ஆண்டுக்குப் பிறகு புதுப்பித்தல் செய்ய பணிச்சான்று கட்டாயமாக வேண்டும் என இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.