தர்மபுரி: இருசக்கர வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

60பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி ஏரியூர் அருகே உள்ள வேப்பம்பட்டி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் சதீஸ்வரன் தொழிலாளி. இவர் கேரளாவில் சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த சதீஸ்வரன் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் முத்துக்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் இன்று மேச்சேரிக்குச் சென்றார். அப்போது ஆயாமரத்துப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் முத்துக்குமார் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து பெரும்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி