தர்மபுரியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவர்கள் கைது

61பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது தர்மபுரி, அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற 25 பேர் சிக்கினார்கள். அவர்களிடமிருந்து 300- க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி