நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடம் அகற்றம்

70பார்த்தது
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு அருகில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான காலி இடங்கள் அமைந்துள்ளன. இதை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதன் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று செப்டம்பர் 13 நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, ஏற்கனவே சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததும், தற்பொழுது தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதும் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நபர்களுக்கு முறையாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று (செப்.13) பாப்பிரெட்டிப்பட்டி உதவி கோட்ட பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் நரசிம்மன் ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பின்னர் அந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி