மழையால் சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுத்த அதிகாரிகள்

60பார்த்தது
தர்மபுரிமாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், கடந்த வாரம் பலத்த காற்றுடன்கனமழை பெய்தது, இதனால்பல்வேறு இடங்களில் வாழை, பாக்கு, தென்னைமரங்கள் சேதமடைந்தன. மழையால் பாதிக்கப்பட்டபகுதிகளை வேளாண்அதிகாரிகள் பார்வையிட்டு, அரசின் இழப்பீடுதொகையை பெற்றுத்தரவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இந்நிலையில், அரூர்கோட்டத்திற்கு உட்பட்ட பாப்பிரெட்டிப் பட்டி, பொம்மிடிமற்றும் மொரப்பூர் வட்டாரங்களில், மழையால்பாதிக்கப்பட்ட பயிர்கள்குறித்து கணக்கெடுப்புபணியை தோட்டக்கலைத்துறை அலுவலர்கள்மற்றும் வருவாய்துறையினர் மேற்கொண்டனர். இதில் அரூர்வட்டாரத்தில் 13 ஹெக்டேரும், பாப்பிரெட் டிப்பட்டிவட்டாரத்தில் 8 ஹெக்டேரும், மொரப்பூர் வட்டாரத்தில்10ஹெக் டேரிலும் வாழைமரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்த தகவல்கள், தோட்டக்கலைத்துறை சார்பில், கலெக்டர் மூலமாக தமிழகஅரசுக்குஅனுப்பப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு தலா ₹17 ஆயிரம் வீதம், பேரிடர் மேலாண்மை நிதி அரசிடம் இருந்து பெறப்பட்டு, தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படவுள்ளது.
அதே சமயம் கனமழை, சூறைக்காற்றுக்கு தென்னை, பாக்குஉள்ளிட்ட மரங்கள் பரவலாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், மொத்த மரங்களின் எண்ணிக்கையில் 33 சதவீதத்திற்கு குறைவான அளவு இருப்பதால், பேரிடரில் கணக்கில் வராது. அதனால் அவற்றுக்கான கணக்கீடு நடக்க வில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you