கடத்தூர்: ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உற்சவர் ஊர்வலம்

56பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் மட்டுமின்றி வருடம் தோறும் ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் வழியில் நேற்று அக்டோபர் 05 புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை அடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டது. மேலும் இரவு 8 மணி அளவில் ஊரை சுற்றி உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கோயில் நிர்வாக குழு மோகன் கிஷோர் குமார் பச்சையப்பன் வினோத் சதாசிவம், அருள்கந்தன் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி