பாலக்கோடு: விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்த மு. அமைச்சர்

73பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளிச்சந்தை பகுதியில் நேற்று காலை வழுவழுப்பான சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் பேருந்தில் பயணம் செய்த 20 க்கும் மேற்பட்டோர் காயம். அவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அக்டோபர் 15 இரவு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் விபத்தில் காயமடைந்தவர்களை நலம் விசாரித்தார். உடன் அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல் டாக்டர் அசோகன் நகர கழக செயலாளர் பூக்கடை ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி